அவியல்
அவியல் என்பது கேரள கரையோரம் பிறந்த ஆற்புதமான ஒரு துணைக்கறியாகும். எல்லா காய்கறிகளையும் மோரில் சமைக்கும் வித்தியாசமான இதன் செய்முறையால், அடையுடன் அருமையாக ருசிக்கிறது. மேலும் சாம்பார் சாதம், குழம்பு சாதத்துடனும் உண்ணலாம்.
தேவையான பொருள்கள் :
அனைத்து காய்கறிகளின் கலவை - 2 கப் ; 2 இன்ச் நீள விரல்களாக நறுக்கப்பட்டது.
( கேரட், உருளை, சக்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கை, பூசணி, புடலங்காய், முள்ளங்கி, வாழைக்காய், காராமணி காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கத்திரிக்காய், கருணைக் கிழங்கு ஆகிய காய்களை உபயோகிக்கலாம். விலக்க வேண்டியவைகள் வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் சேப்பங்கிழங்கு )
சின்ன வெங்காயம் - 4 ; உரித்தது
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பச்சரிசி - 1 மேஜைக் கரண்டி ; 2-3 மணி நேரம் நீரில் ஊற வைத்தது
கெட்டி தயிர் - 1/2 கப் ; கடைந்தது
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
சமைக்கும் முறை :
1) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கறிகாய்களை வைத்து 1/2 கப் நீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்
2) காய்கள் 3/4 பதம் வெந்ததும் இறக்கி விடவும். மசியும் அளவுக்கு வேக வேண்டாம்.
3) ஒரு மிக்சியில் சீரகம், பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்.
4) பிறகு, அதனுடன் துருவிய தேங்காய், ஊற வைத்த அரிசி சேர்த்து சிறிது நீர் ஊற்றி அரைக்கவும்.
5) விழுதான பின், சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக 1 முறை சுற்றி எடுக்கவும்
6) வேக வைத்த காய் கலவையுடன் இந்த விழுதையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 7 நிமிடங்கள் சமைக்கவும்.
7) பிறகு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
8) தாளிப்பதற்கு, ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும்
9) இதை அவியலுடன் சேர்த்து, நன்கு கலந்து விட்டு, 5 நிமிடம் சமைத்து பரிமாறவும்.