சோளப்பொறி பேல்
காய்கறி மற்றும் பழங்களுடன் புதுமையான இந்த பேல், சத்து மிகுந்த ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும்.
தேவையான பொருள்கள் :
1 கப் சோளப்பொரி முத்துக்கள்
½ கப் நறுக்கிய வெங்காயம்
½ கப் நறுக்கிய குடைமிளகாய்
½ கப் நறுக்கிய தக்காளி
½ கப் தோலுடன் சேர்ந்த ஆப்பிள்
½ கப் ஆறஞ்சு துண்டுகள் ( தேவையிருந்தால் )
½ கப் பொடித்த கொத்தமல்லி
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1 சிட்டிகை சர்க்கரை
1 தேக்கரண்டி எண்ணெய்
சுவைகேற்ப்ப உப்பு
பரிமாறும் சமயம் தேவை :
கால் கோப்பை ஒமப்பொடி
செய்முறை :
1) ஒரு எண்ணெய் ஒட்டாத வாணலியில் (நான் ஸ்டிக் பான் ) எண்ணெய்யை ஊற்றி சுடவைத்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
2) பின்பு குடைமிளகாய் மற்றும் சோளப்பொறியை சேர்த்து இன்னும் 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.
3) அடுப்பிலிருந்து எடுத்து மற்ற துணைப்பொருள்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4) பரிமாறும் பாத்திரத்தில் பேலை பரப்பி விட்டு அதன் மீது ஒமப்பொடியை தூவி விடவும்.
5) உடனே பரிமாறவும்.
No comments:
Post a Comment