Social Icons

.
Showing posts with label யாழ் நிர்வாகம். Show all posts
Showing posts with label யாழ் நிர்வாகம். Show all posts

Wednesday, January 1, 2014

புத்தாண்டு தீர்மானங்கள் - 2014



New Year Resolutions - 2014

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகிறது. பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றி கொண்டாடப்படும் புத்தாண்டே குதூகலமாக அமையும். ஆங்கில புத்தாண்டில் பின்பற்றப்படும் சில பிரபலமான பழக்க வழக்கங்களில் முக்கியமானது, ‘ புத்தாண்டு தீர்மானம் எடுப்பது’ ஆகும். இதை ஆங்கிலத்தில் New Year Resolutions என்பர். இந்த பண்பாட்டை சிறிது ஆராய்வோமா ?




பிறக்க போகும் ஆண்டில் சில பொறுப்புகளை மக்கள் தமக்கு தாமே வகுத்து கொண்டு, அந்த இலக்கை அடைய பாடுபடுவதே புத்தாண்டு தீர்மானத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த மரபானது பண்டைய பாபிலோன் நாகரீகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். ஆண்டின்  முதல் நாள் நமக்கு எவ்வாறு அமைகிறதோ, அந்த யோகமே முழு ஆண்டும் தொடர்ந்து வரும் என்று முதல் முதலாக நம்பியவர்கள் பாபிலோனியர்களே. இந்த நம்பிக்கை சிறிதும் குறையாமல் இன்றும் பின்பற்றப் படுகிறது.

சில புகழ் பெற்ற தீர்மானங்கள் :
# நான் புகை பிடிப்பதை விட்டு விடுவேன்
# நான் குடிப்பதை நிறுத்திக் கொள்வேன்
# நான் உடற்பயிற்சி செய்து உடலை பேணி பாதுகாப்பேன்
# குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன்
# சோம்பேறிதனத்தை விடுப்பேன்
# கோபத்தை தவிர்ப்பேன்
# தான தர்மங்கள் செய்வேன்
# தேவையற்ற செலவுகள் செய்ய மாட்டேன்
# வருங்காலத்துக்காக சேமிப்பேன்

இவ்விதமாக உறுதி மொழி ஏற்பது என்பது எளிதானதாக இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. புத்தாண்டு முடிந்த சில நாட்களில் இந்த உறுதி மொழிகளும் காற்றில் பறந்து விடுகிறது

தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது ?
மக்கள் இந்த தீர்மானங்களை கண்டிப்பாக நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இது நமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்த ஒரு உறுதிமொழியை எடுக்கும் முன்பும், நம்முடைய சூழ்நிலையையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் நம்மால் அதை உறுதியுடன் நிறைவேற்றிட முடியும். தீர்மானத்தை அடைய சில யோசனைகள் இதோ  :

# முதலில் நீங்கள் கடந்த ஆண்டு எடுத்த உறுதி மொழி, அது தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்,  நீங்கள் செய்த தவறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
.
# நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை, உங்கள் நெருங்கிய உறவுகளிடமும், நட்பு வட்டாரத்திலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உங்கள் வார்த்தையை காப்பாற்ற வேண்டுமே என்ற ஒரு கட்டாயத்திற்க்காகவாவது நிச்சயமாக இதை பின்பற்ற தோன்றும்.

#  புத்தாண்டு தினத்தன்று மட்டும் வீராப்பாக தீர்மானத்தை பற்றி நினையாமல், அடுத்து வரும் நாட்களிலும் அடிக்கடி நினைத்து நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப் பட்டால், அதை ஒரு தாளில் எழுதி தங்களின் கண்ணுக்கு அடிக்கடி புலப்படுமாறு காட்சி படுத்தவும்.

# நம்முடைய தொடர் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் எனில், நம்மை நாமே பாராட்டி கொள்வதில் தவறில்லை. இதனால் தன்னம்பிக்கை இன்னும் பலப்படும்.

#  உறுதி மொழி எடுக்கும் போதே, ஏனோ தானோ என்றோ, மற்றவர்க்காகவோ, வேண்டா வெறுப்புடனோ எடுக்காமல் ஒரு பற்றுடன் ‘எனக்காக’, ‘என்னால்’ என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்னர் ஆசையுடனும் காதலுடனும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற செயலாற்ற வேண்டும்.



இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த வருடம், உங்கள் யாழ் இனிது சில தீர்மானங்களை கடைபிடிக்குமாறு தம் வாசகர்களை பரிந்துரைக்கிறது :

1) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வோம் – நெகிழ்தாள் பொருள்களால் சுற்றுப்புற சூழலுக்கு பேராபத்து என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுப்போம். இதை பற்றி ஒரு பதிவை யாழ் இனிதில் ஏற்கனவே எழுதியுள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும் >>> பிளாஸ்டிக் – தடை செய்.

2) பட்டாசு கொளுத்துவதை தவிர்ப்போம் – பட்டாசு வெடிப்பது நம் சந்தோஷத்திற்காக மட்டுமே. இதனால் சுற்று சூழலுக்கு கேடு தான் விளைகிறது. கந்தக புகை மனிதர்களை மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை ஏற்படுத்தி உலக அழிவிற்கு வழிகோலும் பட்டாசை மறப்போம். நம்முடன் தெரிந்தோ தெரியாமலோ இணைந்து விட்ட இந்த பட்டாசு கொளுத்தும் பழக்கத்தை, நம் எதிர்கால சந்ததியினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, அடியோடு துறப்போம்.

3) நம் நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிப்போம் – வெளி நாட்டில் தயாரிக்கப்படும் உணவு பொருள்கள், ஆடை அணிகலன்கள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றை புறக்கணித்து நம் நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம். நம் தேசப்பிதா காந்தி அடிகள் குரல் கொடுத்த சுதேசி பொருள் புறக்கணிப்பு கொள்கையை பின்பற்றுவோம்.

4) சமூக நலத் தொண்டு செய்வோம்  - சமூக விழிப்புர்ணர்வு இயக்கங்களில் சேர்ந்து கொண்டு, ரத்த தானம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு உதவி, இலவச கல்வி அளித்தல் போன்ற பணிகளில் பங்கேற்போம்.

5)   ஆளுக்கொரு செடி வளர்ப்போம் – நம்மால் இயன்ற அளவில் சுற்று சூழல் மேன்மைக்கு உதவுமாறு ஆளுக்கொரு செடி வளர்க்க உறுதி எடுப்போம். முக்கியமாக, திருமணம், பிறந்த நாள் ஆகிய விழாக்களில் வேறு பரிசு பொருள்களை கொடுப்பதை தவிர்த்து, ஒரு செடியை பரிசளிக்கலாம்.

6) அன்பை நிலை நாட்டுவோம் - நம் குழந்தைகளின் பிறந்த நாளை படாடோபமாக உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து, ஏதேனும் அனாதை ஆசிரமத்தில் அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டாட உறுதி பூணுவோம். இவ்வாறு செய்வதால், ஆதரவற்றோரை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்லாசியை பெறும் பாக்கியமும் கிட்டுகிறது.

புத்தாண்டில் கிடைப்பதோ தன்னம்பிக்கை !
போராடி சூடுவோம் வெற்றி வாகை !!
இதனால் ஒளிவீசும் நம் வாழ்க்கை !!!


யாழ் இனிது வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Wednesday, December 25, 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஒரு சிறப்பு பார்வை


Christmas - Amazing Facts

 
கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்

## யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்லஅவர் கி.மு. 6-க்கும் கி.பி. 30-க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின் கணிப்பாகும்.

##  யேசு கிறிஸ்து பிறந்தது மர கொட்டகையில் அல்ல. ஒரு குகையின் உள்ளே என்பது பல பைபிள் பண்டிதர்களின் வாக்காகும்.

## 'மூன்று அறிவாளர்கள்' குழந்தை யேசுவை வழிபட்டனர் என்று கதைகளில் கூறப்பட்டாலும், பைபிளில் எண்ணிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. மத்தேயூவின் நல்வாக்கில் அறிவாளர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

## 3 அரசர்கள் 12 நாள் அவகாசத்தில் குழந்தை யேசுவை கண்டுபிடித்தமையால், கிறிஸ்துமஸ் என்பது 12 நாட்களாக கொண்டாடப்படுகிறது.

##  அறிவாளர்களுக்கு யேசுவின் இருப்பிடத்தை காட்டிய "பெத்தலகேம்" நட்சத்திரம் ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோளாக இருந்திருக்க கூடும் என வானியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.


கிறிஸ்துமஸ்

##  கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தின் "கிறிஸ்டிஸ் மேஸீ" (Cristes Maesse) எனும் சொற்றொடரிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் கிறிஸ்துவின்  கூட்டம் (Christ's Mass) ஆகும்.

##  கிறிஸ்துமஸின் சுருக்கமான X-மஸ் என்பது மதத்திற்கு முரணானது அல்ல. கிரேக்க மொழியில் X என்பது யேசுவை குறிக்கும் குறிசொல்லாகும்.

##  அமெரிக்க புராதனவாதிகள் நன்றி நவிலும் நாளை  (Thanks Giving Day) கிறிஸ்துமஸை விட முக்கியமான பண்டிகையாய் கொண்டாட முயன்றார்கள்.

##  கி பி 440 ம் ஆண்டு வரை,  டிசம்பர் 25 ஆனது  யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை.


கிறிஸ்துமஸ் பாடல்கள்

##  13ம் நூற்றண்டில், அசிசியின் புனித 'ஃபாதர் ஃப்ரான்சிஸ்' என்பவர் அறிமுகப்படுத்தும் வரை,  "காரோல்" (Carols) எனப்படும் கிறித்துவ ஞானகீதம் தேவாலையங்களில் பாடப்படவில்லை.

##  "வஸைலிங்" (Wassailing) எனப்படும் ஆங்கில சம்பிரதாயதிற்கேற்ப, அக்கம்பக்கத்தோர் நல்வாழ்விற்கு பாடப்பட்ட வாழ்த்துப்பா தான் பின்னர் "காரோல்" எனப்படும் கிறித்துவ ஞானகீதம் ஆகியது.

##  கிறிஸ்துமஸின் போது பாடப்படும் புகழ்பெற்ற "ஜிங்கிள் பெல்ஸ்" (Jingle Bells) பாடல் தான் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்ட முதல் பாடலாகும். ஜெமினி 6 எனும் விண்கலத்தில் பயணம்செய்த "டாம் ஸ்டாஃபர்ட்" (Tom Stafford) மற்றும் "வாலி சிறா" (Wally Schirra) ஆகிய விண்வெளி வீரர்கள், இந்த பாடலை டிசம்பர் 16, 1695 ல் ஒலிபரப்பினார்கள்.


கிறிஸ்துமஸ் தகவல்கள்

##  ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் தேதி பரிசுகள் வழங்கும் பழக்கமுள்ள "சின்டர்க்ளாஸ்" (Sinterklass) என அழைக்கப்பெற்ற 'புனித நிகோலாஸ்' அவர்களை பற்றிய நெதர்லாண்டின் நாட்டுப்புற கதையிலிருந்து தான் கிறிஸ்துமஸ் புகழ் "சான்டா க்ளாஸ்" (Santa Claus) தாத்தா பிறந்தார்.

##  உலகத்தின் மிக உயரமான 221 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 1950 ம் ஆண்டு வாஷிங்டன் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டது. 

##  கிறிஸ்துமஸ் மரத்தின் அநேக பகுதிகள் உண்ணத் தகுந்ததாகும். குறிப்பாக அதன் கூர் முனை இலைகள் வைட்டமின் "சி" சத்துக்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

##  சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னால், கிறிஸ்துமஸ் மரம் சுமார் 15 ஆண்டுகள் வளர்க்கப்படுகிறது.

##  சுற்றுசூழல்வாதி ஆகிய அமெரிக்க அதிபர் "டெடி ரூஸ்வெல்ட்" (Teddy Roosevelt) 1912 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறுவுவதை தடை செய்தார்.



##  12 ஆம் நூற்றண்டில் ஃப்ரென்சு கன்னிகாஸ்த்ரீகள் ஏழைகள் வீட்டு வாசலில், காலுறையின் உள்ளே பழங்கள், உலர் பழங்கள் மற்றும் சிறிய ஆரஞ்சு சுளைகள் வைத்து கதவில் மாட்டிவிட்டு வந்த பழக்கம், பின்னர் காலுறையின் உள்ளே ஆரஞ்சு சுளைகள் வைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரபாக மாறிவிட்டது.

##  பண்டிகையின்  சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பிட்டு, தொன்மையில் திராட்சை மற்றும் திராட்சை ரசமான மதுவை கொண்டு செய்யப்படும் "சூப்" ஆக தான் இருந்தது.

##  1938 இல் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உருவாக்கபட்ட கண்டுபிடிப்பு தான் "ருடால்ஃப்" (Rudolph) எனப்படும் சிவந்த மூக்கு கொண்ட பனி கலைமான்.

##  நம் பூமியில் கிறிஸ்துமஸ் எனும் பெயர் கொண்ட இரு தீவுகள் உள்ளன. ஒன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள (முன்னர் "கிறிட்டி மாட்டி" என அழைக்கப்பெற்ற) கிறிஸ்துமஸ் தீவு. மற்றொன்று இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு.



Thursday, September 29, 2011

ஒன்பது இரவுகள் - ஒப்பிலா தகவல்கள்



ஒன்பது இரவுகள்ஒப்பிலா தகவல்கள்

நவராத்திரி என்றால் என்ன ?

விஞ்ஞான தத்துவங்கள் கோலோச்சும் தற்காலத்திற்கு வெகு முன்னமே இந்திய பண்டிகைகள் நிலைநிறுத்திய மெய்ஞ்ஞானம் அற்புதாமானவை.
அப்படிப்பட்ட ஒரு பண்டிகையான நவராத்திரியை பற்றி தெரிந்து கொள்வோமா தோழர்களே !

சக்தி என்பது அழிவில்லாத ஒன்றாகும், அதை உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது, எப்போதும் அது நிலைத்து இருக்கும் என்ற விஞ்ஞான தத்துவம் நவராத்திரி எனப்படும் சக்தி வழிபாடு மூலம் நிலைநிறுத்தப்படுவதே இப்பண்டிகையின் பின்புலமாகும். "துர்க்கை" என்றால் தீய சக்தியிலிருந்து நம்மை காப்பவள் என்று பொருள். நம்மில் ஒளிந்திருக்கும் நற்சக்தியை தூண்டி எழுப்பும் முயற்சி தான் நவராத்திரி தத்துவம்.



ஏன் சக்தி வழிபாடு ?

கடவுளை இறைவன் என்று ஆண்பால் கொண்டு அழைக்கும்போது, ஏன் அம்மனை கொண்டாடுகிறோம் என நாம் ஐயம் கொள்ளலாம். காத்தல், பேணுதல்,  நல்வழி படுத்துதல் என இறைவனின் பல செயல்கள் தாய்மையை தான் சித்தரிக்கின்றன. குழந்தை தன் தாயில் இந்த குணங்களை காண்பதால் இறைவனின் இந்த தாயம்சத்தை போற்றவே நவராத்திரி விழா சக்தி வழிபாடாக விளங்குகிறது.



ஏன் வருடத்திற்கு இரண்டு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது ?

இந்திய நாட்டை பொருத்தவரை கோடையின் தொடக்கமும், குளிர்வாடையின் தொடக்கமும் சீதோஷணம் மற்றும் சூரியனின் ஆதிக்க சக்தியையும் நிர்ணயிக்கிறது. ஆகையால் இந்த இரு காலத்திலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மேலும் வேறு இரண்டு விளக்கமும் உண்டு

) பருவ மாற்றத்தின் போது நம் பூமி சூரியனின் மூலம் அதற்குண்டான ஒளியும் வெப்பமும் பெறுகிறது, இதை நன்றியோடு நினைக்கும் வண்ணம்.

இந்த பருவ மாற்றத்தால், நம் உடலில் மற்றும் மனதில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை சரி விகிதமாக காக்க வேண்டியும் அம்பாளை வணங்குகிறோம்.



ஒன்பது இரவுகள் என்ன கணக்கு ?

மூன்று பிரிவாக நவராத்திரி விழா பிரிக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் நல்வாழ்வின் தேவைகளான கல்வி, செல்வம்,வீரம் ஆகியவற்றில் துன்பத்தை எதிர்கொள்ளும் சக்தியை வேண்டி துர்க்கை அம்மனை வணங்கும் நாட்களாகும்.

அடுத்த மூன்று தினங்கள் நம் தேவைகள் அனைத்திற்கும் உதவும் செல்வம் வழங்கும் திருமகள் ஆகிய லக்ஷ்மி தேவியை வணங்கி அவள் ஆசி பெறும் நாட்களாகும்.

கடைசி மூன்று நாட்கள் நாம் பெற்ற வீரம் மற்றும் செல்வத்தை நல்முறையில் செலுத்த உதவும் கல்வியை அருளும் கலைமகள் எனும் சரஸ்வதியை போற்றி கொண்டாடும் தினங்களாகும்.

ஆக வாழ்வியல் தத்துவங்களை நம் பெரியோர்கள் நவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள் என்பது ஐயம் இல்லாத ஒன்றாகும்.



நாம் அறிந்திராத சில நவராத்திரி தகவல்கள் ;

1)  ஷரத் நவராத்திரி, வசந்த் நவராத்திரி மற்றும் ஆஷாட் நவராத்திரி என நவராத்திரி மூன்றாக பிரிக்கப்படுகிறது.

2)  செப்டம்பர் - அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி முதன்மையானதாகும்.

3)  துர்க்கையால் வதம் செய்யப்பட்ட மஹிஷாசுரன் வதத்தை ஒட்டி ஷரத் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.



4)  மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வரும் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் அதை வசந்த் நவராத்திரி அன்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாவாகும்.

5)  ஹிமாச்சல் பிரதேசத்தில் "ஆஷாட்"என்று அழைக்கப்படும் மழை பருவத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட் னவராத்திரி ஆகும். ஜூலை - ஆகஸ்ட் மாதம் இந்த கொண்டாட்டம் பின்பற்றப்படுகிறது.

6)  சக்தியின் ஒன்பது வடிவமானது துர்கா, பத்ரகாளி, ஜகதம்பா,   அன்னபூர்ணா, சர்வமங்களா, பைரவி, சண்டிகா, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என்று போற்றப்படுகிறது.







7)  நவராத்திரி விழாவின் தேதிகள் நிலவு பஞ்ஞாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுகின்றதுஅஷ்வின் மாதத்தில் பிறை தோன்றும் முதல் நாளான "பிரதிபாத" நாளில் இவ்விழா தொடங்குகிறது.

8)  ஒன்பது  நாளின் முடிவில் வரும் பத்தாம் நாளை "விஜயதசமி" அல்லது "தஷரா" என்று கொண்டாடி நவராத்திரி விழா செவ்வனே நிறைவு பெறுகிறது.





 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking