மரண தண்டனை
தவறுகள் செய்யாமலே தண்டிக்கப்படுதல்
மரணத்தைக் காட்டிலும் கொடுமையென்று…
நீ அறிவாயோ?
நான் அறிவேன்!
தப்பித்தல்களுக்கான காரணமில்லாமல்
நீண்டுக் கொண்டேயிருக்கும்
உன் மௌனம்
என்ன மரண தண்டனையா?
சொல்லிவிடு…
மரணத்தைக் கூட மகிழ்வாய் தாங்கிக் கொள்வேன்
ஆனால் உன் மௌனத்தையல்ல.
short n sweet
ReplyDeleteமௌனமும் ஒரு தண்டணைதான் என்பதை இப்போது அறிந்துகொண்டேன் உங்களின் கவிதை வாயிலாக!
ReplyDeleteஇனிய கவிதை !! வாழ்த்துக்கள்
- இனியன்
கிரண், பின்னூட்டத்திற்கு நன்றி !
ReplyDeleteஇனியன் வணக்கம் !
ReplyDeleteவீணாக்கும் வார்த்தைகளை விட, அர்த்தமுள்ள மௌனமும் சிறந்தது. வருகைக்கு நன்றி !
மிகவும் நல்ல கவிதை, பாராட்டுக்கள்!
ReplyDeleteராஜசேகர், முதற்கண் தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. நல்ல கவிதை நல்ல ரசிகர்களால் தான் ரசிக்க முடியும். உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.
ReplyDeleteகாலம் தவறி படிகின்றேன்... என் மௌனத்தால் பல மனங்களை கொன்ற பிறகு..... வார்த்தைகள் இல்லை இவ்வரிகளை விவரிப்பதற்கு...
ReplyDelete23 ஆண்டுகள் மௌனங்கள் ...மரணதண்டனையைவிட...மிக கடுமையானது என்பதை ..மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும்..உணர்வான்...அதை உணராதவன்?
ReplyDelete