Social Icons

.

Thursday, June 2, 2011

இதுவா போர் ???


இதுவா போர் ???




உலகில் ஏது கிழக்கும் மேற்க்கும்
அன்பு மட்டுமே அன்பை வார்க்கும்

எல்லை கோடுகள் மனதில் எதற்குநன்பா
உள்ளத்தில் கோடு கிழித்தால் வெற்றியும் தோற்க்கும்

வீரம் என்பது வார்தையில் இல்லை
வெற்றியும் தோல்வியும் உறவுக்குள் இல்லை

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தால்
வாராது என்றும் தொல்லை

யாரோடு யார் பழி தீர்ப்பது
தேவை இல்லாமல் உள்ளம் வெறுப்பது

கூடுகள் வேறு என்பதால்
கிளிகளேவா கிளிகளை கொல்வது

அந்நியனை வெளியேற்ற போராடினோம் அன்று
அண்ணன் தம்பீ நமக்குள்ளே ரத்தம் பார்க்கிறோம் இன்று

காலிலே புன்பட்டாலும் கண்ணில் தானே கண்ணீர் வழியும்
விட்டு விடு தோழா எதற்கு இந்த குத்தும் பழியும்

பாரதி இருந்தால் அவன் உள்ளம் நோகும்
ஏன் என்றால் அவன் தான் சொன்னான்


தமிழ்
இனி மெல்ல சாகும் !!!






1 comment:

  1. கண்ணீர் மிதகும் ஒரு பதிவு... கணத்த மனதுடன் மீண்டும் படிக்கிறேன் என்று முடியும் இந்த போர் தாகம்.......

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking