ஆந்திரா கோழி குழம்பு
ஆந்திர மாநில மக்களின் சமையலில் 'கோடி குர்ரா' என்னும் கோழி குழம்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த காரசாரமான சுவைமணம் மிக்க கோழி குழம்பின் தனித்தன்மையான செய்முறை விளக்கம் தங்களுக்காக இதோ :
தேவையான பொருள்கள் :
கோழி கறி - 800 கிராம் ; நடுத்தர துண்டுகளாக வெட்டியது
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 ; சன்னமாக வெட்டியது (அ) அரைத்தது
இஞ்சி பூண்டு பசை - 3 தேக்கரண்டி
தயிர் - 1 கப் ; கடைந்தது
பழுத்த தக்காளி - 2 ; துருவியது (அ) சன்னமாக வெட்டியது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சுடு தண்ணீர் - 1 கப்
சிக்கன் மசாலா (அ) கரம் மசாலா - 1 தேக்கரண்டி
ஃப்ரெஷ் க்ரீம் (அ) பால் - ½ கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லி தழை - கை அளவு
செய்முறை :
1) ஒரு அடி கணமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும்.
2) வெங்காயம் பொன்னிறம் ஆனதும், இஞ்சி பூண்டு பசையை வதக்கி தக்காளி சேர்க்கவும்.
3) பிறகு, கடைந்த தயிர் சேர்த்தபடி கிளறவும்.
4) 5 நிமிடம் கை விடாமல் கிளறிவிட்டு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
5) கூடவே கோழி துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கலக்கவும். கோழியுடன் அனைத்து மசாலாக்களும் கலந்து பொன்னிறமானதும் சுடு தண்ணீர் ஊற்றவும்.
6) நீர் கொதித்ததும் தட்டை மூடி, குறைந்து தீயில் கோழி வேகும் வரை 15 நிமிடம் சமைக்கவும்.
7) இப்பொழுது சிக்கன் மசாலா தூவி, கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
8) பிறகு, ஃப்ரெஷ் க்ரீம் (அ) பால் ஊற்றி, 2 நிமிடம் கலந்து அடுப்பை அணைக்கவும்.
9) கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி அலங்கரித்து சிறிது நேரம் கழித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Anathu kuripukalum arumai... Asaivam saapidathavarkalai kuda sappida thoondum... Arumai sagothari...
ReplyDelete