Social Icons

.

Monday, June 27, 2011

ப்ளாஸ்டிக் - தடை செய்


ப்ளாஸ்டிக் - பேராபத்து

உடனடியாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் :

1) மைக்ரோ அவனில் ப்ளாஸ்டிக் சாமான்களில் சமைக்க வேண்டாம்
2) ஃப்ரிட்ஜின் உறை பெட்டியில் தண்ணீர் பாட்டில்கள் வைப்பதை தவிர்க்கவும்.
3) மைக்ரோ அவனில் உணவு பொருள்களை ப்ளாஸ்டிக் உறையில் இட்டு வைப்பதை தவிர்க்கவும்.

மேற்கூறியுள்ள அறிவுறைகளை ஜான் ஹாப்கின்ஸ் என்பவர் தனது அண்மை செய்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதே தகவல் வால்டர் ரீட் ஆர்மி மருத்துவ மையத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் கேஸ்டில் மருத்துவமனையை சார்ந்த உடல்நல திட்ட மேலாளர் டாக்டர் எட்வர்ட் ஃபூஜி மோட்டோ இது போன்ற சுகாதார தடையை குறித்து ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார்.





ப்ளாஸ்டிக் பாட்டிலில் குடிநீரை உறைய வைப்பது ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில், அவ்வாறு உறைய வைத்த ப்ளாஸ்டிகில் இருந்து டையாக்ஸின் என்ற நச்சு பொருள் வெளியாகிறது. டையாக்ஸின் என்ற வேதியியல் நச்சு பொருள் புற்றுநோய் குறிப்பாக மார்பக புற்றுநோய் உண்டாக காரணமாகிறது. மேலும் டயாக்ஸின், நம் உடல் அணுக்களுக்கும் பெரும் சேதம்  உண்டாக்குகிறது.



உணவுப் பொருள்களை ப்ளாஸ்டிக் பாத்திரத்தை கொண்டு மைக்ரோ அவனில் வைத்து சுட வைப்பதை தவிர்க்கவும். இந்த அறிவுறை குறிப்பாக கொழுப்புச் சத்து அடங்கி உள்ள உணவுக்கு சால பொருந்தும். கொழுப்புச் சத்து வெப்பம் மற்றும் ப்ளாஸ்டிகுடன் இணைந்து டயாக்ஸின் வெளியிடுவதால் நம் உடல் அணுக்களுக்கு இது கேடு விளைவிக்கும். மாறாக, உணவுப் பொருள்களை கண்ணாடி, பீங்கான் பாத்திரத்தில் சுட வைப்பது பரிந்துரைக்க பட்டுள்ளது. இம்முறையால், அதே பயன் டயாக்ஸின் இல்லாமல் பெறப்படுகிறது. ஆகையால், நூடில்ஸ் மற்றும் சூப் போன்ற உணவுகளை, அவை விற்கப்படும் குடுவைகளில் அப்படியே சுட வைக்காமல் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சுட வைப்பதே சிறந்த முறையாகும்.



காகித உபயோகம் கெடுதல் இல்லையென்றாலும் காகிதத்தின் மூலம் நாம் அறியாத ஒன்றாகும். பதபடுத்தப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் மற்றும் பீங்கான் பாத்திரங்களின் உபயோகம் பாதுகாப்பான ஒன்றாகும். சிறிது காலம் முன்னர் ஃபாஸ்ட் ஃபுட் நிலையங்களில் உணவு பொருள்கள் ஃபோம் தட்டுகளில் இருந்து காகித தட்டுகளுக்கு மாறியது என்பதை நினைவு கூறுங்கள். இம்மாற்றம் டயாக்ஸின் வெளியீட்டில் உள்ள ஆபத்தால் தான் கொண்டு வரப்பட்டது.

சரண் போன்ற ப்ளாஸ்டிக் உறைகள் மூலம் உருகி வெளி வரும் நச்சு பொருள்கள் உணவில் கலந்து விடும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை ப்ளாஸ்டிக் உறைகளுக்கு பதிலாக காகித துவாலைகளில் வைத்து சுட வைப்பது பாதுகாப்பானது



நம் சுற்றுப்புறத்தில் புழங்கும் ப்ளாஸ்டிக் பைகளை தடுப்பது எவ்விதம் ?

பொதுவாக, எல்லோரும் மற்றவர்கள் பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை விமரிசனம் செய்கிறார்கள். ஆனால் தான் பொருள் வாங்க செல்லுகையில் போதிய அளவு பைகளை எடுத்துக் கொண்டு போவதில்லை. உச்சநீதிமன்றம், மாநில அரசாங்கம், மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் ப்ளாஸ்டிக் மற்றும் ப்ளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை தடை விதிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

இருப்பினும், தற்போதும் கூட நம்மில் பலர், ப்ளாஸ்டிக் பைகளில் பொருள்கள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். மேலும் வணிக நிறுவனங்களும் ப்ளாஸ்டிக் பைகளில் வைத்து தான் பொருள்களை விநியோகிக்கிறார்கள். பல மாநிலங்களில் ப்ளாஸ்டிக் முழுவதும் தடை விதிக்கப் படாமல் 40 மைக்ரானிற்கும் குறைவான தடிமன் உள்ள ப்ளாஸ்டிக் பைகளை மட்டுமே தடை செய்துள்ளார்கள். காலப்போக்கில் மக்கி விடும் பொருளாக ப்ளாஸ்டிக் இல்லாததால் நம் சுற்றுசூழலுக்கும் சமுதாய கட்டமைப்பு மேலாண்மைக்கும் அதீத சேதம் உண்டாகிறது.



ப்ளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது எவ்விதம் ?

பெருவாரியான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டோ அல்லது அதற்குண்டான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டோ உள்ள நிலையிலும், ப்ளாஸ்டிக் பைகளின் தேவை என்னவோ அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறதுஇருப்பினும் ப்ளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், இதை விட மலிவான மற்றும் வசதியான மாற்றுப்பொருள் இல்லை என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக்கை தவிர்க்க பல எளிய முறைகள் உள்ளன என்பது ஆறுதலான செய்தியாகும்.

கீழ்வருவன நம் சுற்றுபுறத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க உதவும் ஆலோசனைகள் ஆகும் :

அவ்வப்போது புதிய ப்ளாஸ்டிக் பைகளை வாங்காமல், உங்கள் இல்லத்தில் ஏற்கெனவே நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளையே தொடர்ந்து பயன்படுத்த உறுதி பூணுங்கள்.

உணர்ச்சிபூர்வ கொள்முதல் : தாங்கள் சொற்ப பொருள்களையே வாங்கும் பட்சத்தில் அதற்காக பைகளை கோராமல் தங்கள் கைகளிலேயெ எடுத்துச் செல்லும் வழக்கம் கொள்ளுங்கள்



குடும்பத்தினர் உடனோ அல்லது நண்பர்களுடனோ ஷாப்பிங் செல்லும் பட்ச்சத்தில் எல்லோரும் பொருள்களை பகிர்ந்து சுமக்கும் வண்ணம் வழி வகுங்கள்.

மொத்த கொள்முதல் செய்யும் போது கடைகளில் உள்ள தள்ளு வண்டிகளை பயன்படுத்தி உங்கள் வாகனத்தை அடையுங்கள்.

இல்லம் சேர்ந்தவுடன் பொருள்களை கூடையிலோ அட்டை பெட்டியிலோ கொண்டு செல்லுங்கள்.

எவ்வாறு ஆயினும் அட்டை பெட்டிகள் மற்றும் ஜாடிகள், ப்ளாஸ்டிக் பையை காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டவை ஆகும்.

பெரும்பாலும் ஷாப்பிங்கின் போது மக்கிப் போகும் தன்மையுள்ள பைகளையே பயன்படுத்துங்கள். அவ்வாறு பயன்படுத்துகையில், அவை பூமியில் கலந்து மக்கிப் போகும். ஆகையால், தேவை இல்லா பொருள்கள் அகற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்கக் கூடும்.

உங்கள் கைப்பையிலோ பெட்டியிலோ மடக்கி வைத்துக் கொள்ள மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ள பைகளையே உபயோகப் படுத்தவும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பைகளை உங்கள் வீட்டு வாசலிலேயே வைத்திருந்து அடுத்த முறை ஷாப்பிங் செல்லுகையில் இலகுவாக அவைகளை உங்கள் வாகனத்தில் வைத்துக் கொண்டு புறப்படுவது புத்திசாலித்தனமாகும்.

ப்ளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே மனிதனின் வணிக வாழ்க்கை தொடங்கி விட்டது என்பதை நினைவில் கொள்ளவும். அந்த கால கட்டத்தில் தாங்கள் வாங்கிய காய்கறிகள், மளிகை மற்றும் இதர தினசரி உபயோகப் பொருள்களை மக்கள் சனல் பையிலோ பிரம்புக் கூடையிலோ அல்லது துணிப்பைகளிலோ தான் ஏந்திச் சென்றார்கள். இதே முறையை நீங்களும் பின்பற்றி ப்ளாஸ்டிக்கை தடை செய்த பெருமையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பறைசாற்றிக் கொள்ளலாமே !



பழைய செய்திதாள்கள் மற்றும் பத்திரிக்கைகளை வெட்டி சிறிய காகித பைகள் மற்றும் பொட்டலங்கள் செய்யும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு, அவற்றை தானம் செய்து விடவும்.

ப்ளாஸ்டிக் பைகள் பொதுவாக மறு உபயோகத்திற்கு சிறந்தவை ஆகும். ஆயினும் இதை அறியாத நிலைமையும், இதை பழக்கமாக கொள்ளும் எண்ணமும் மக்களுக்கு இல்லாதது வேதனைக்குரியது. இதே போல் ப்ளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்வது புதிய பைகளை உருவாக்குவதைக் காட்டிலும் செலவு மிகுந்தவை என்ற தவறான எண்ணமும் நிலவுகிறது. உண்மை என்னவென்றால், ப்ளாஸ்டிக் பைகளின் மறுசுழற்சி புதிய பைகளை உருவாக்குவதைவிட நான்கு மடங்கு செலவு குறைந்த ஒன்றாகும்.

ஆகையால், பூமியில் ப்ளாஸ்டிக் பைகளை எரியும் பழக்கத்திற்கு உள்ளாகி அவ்வாறு குவிந்துள்ள பொருள்களால் நம் பூமி நிறைந்து வருகிறது என்று புலம்புவதைக் காட்டிலும், ப்ளாஸ்டிக்கின் மறுசுழற்சியை மனதார ஊக்குவிக்கலாமே !



நமது சுற்றுசூழலைப் பற்றி எப்போதும் குறை கூறிக்கொண்டிருக்கும் நாம் ஷாப்பிங் செல்லுகையில் பைகளை கொண்டு செல்லாமல் வெறும் கைகளை வீசிக் கொண்டு போவது வேடிக்கையான விநோதம் அல்லவா ?

சில மளிகை கடை மற்றும் சூப்பர் மார்கெட்டுகளில் ஒரு ப்ளாஸ்டிக் பைக்கு 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள், ஏன் வீட்டில் இருந்தே ஒரு பையை எடுத்து செல்லக் கூடாது ?

வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்று பழமொழி கூறும் நாமே ப்ளாஸ்டிக் பைகள் பொருத்தவரையில் வீட்டில் இருந்து தொடங்க பழக்க்கத்தை மறந்து விடுகிறோம்.

ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் இருந்து ப்ளாஸ்டிக்கை அகற்றி விட்டால், ஒரு பெரிய விழிப்புணர்சிக்கு மகத்தான பங்காற்றியதற்கான பெருமை உங்கள் வசமே !

உங்கள் குடியிருப்பில் மற்றும் சுற்றுசூழலில் ப்ளாஸ்டிக்கின் தடை அமல் படுத்தப் படுவது என்பது சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றும் பெரும் தொண்டாகும்.

நினைவிருக்கட்டும், இப்பூமியின் எதிர்காலம் நம் கையில் !




இனிமேல் நீங்கள் எளிதாக செய்யக் கூடிய ஒன்று :



உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மதிக்கும் மற்றும் அன்பு வைத்திருக்கும் அனைவரிடமும் இந்த கட்டுரையை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே !


11 comments:

  1. Wonderful Post :)
    Really useful & well designed with apt pictures..

    ReplyDelete
  2. நன்றி ராஜேஷ் ! மேலும் சில உபயோகமான பதிவுகளைக் காண மீண்டும் வருக !

    ReplyDelete
  3. இந்த கட்டுரையை பகிர்ந்தால் மட்டும் போதாது; ப்ளாஸ்டிக்கின் பயன்பாட்டினை நிறுத்தி மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும்.

    ReplyDelete
  4. கீப்-ஸ்மைல் உங்கள் கருத்துக்களுக்கு மனம்கனிந்த நன்றி!

    இந்த தளத்தை தொடங்குகையில் இங்கு பதிக்கப்பெறும் கருத்துக்களின் வழியை பின்பற்ற வேண்டும் என்ற அடித்தள் ஆவல் கொண்டு, எம்மால் முடிந்த நற்செயல்களை பகிர்வதோடு நில்லாமல்,அச்செயல்களை இயன்ற அளவு பழக்கப்படுத்திக்கொண்டு, பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயன்று கொண்டிருக்கிறோம். உங்களை போல் நல்லுள்ளம் கொண்ட நண்பர்களின் துணையோடு செவ்வனே எங்கள் பணி சிறக்கும் என்ற மாறா நம்பிக்கையுடன்.

    யாழ் இனிது

    ReplyDelete
  5. நானும் இதையே மற்றவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.நல்ல எளிமையாக விசயங்களை எடுத்து சொல்லும் அளவுக்கு உங்கள் கருத்துகள் உள்ளன.நன்றி!!!

    ReplyDelete
  6. pls give some slogans in tamil

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்களை கொடுப்பதில் உங்களுக்கு இணை யாருமிலர்....

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking