காராமணி காய் பொரியல்
காராமணி காய் அல்லது பச்சை காராமணி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் ருசிக்க ஒரு அருமையான துணை ஆகும்.
தேவையான பொருள்கள் :
காராமணி காய் – 2 கப், 1 இன்ச் துண்டுகளாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 ; சன்னமாக நறுக்கப்பட்டது
கிராம்பு – 1
பட்டை – ¼ இன்ச் துண்டு
இஞ்சி – ½ இன்ச் துண்டு
பூண்டு – 2 பல்; உரித்தது
சமையல் எண்ணெய் - 4 மேஜைக் கரண்டி
கடுகு - ¼ தேக்கரண்டி
உளுந்து - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ¼ கப்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி இலை - கை அளவு
செய்முறை :
1) ஒரு மிக்ஸியில் கிராம்பு பட்டை, இஞ்சி பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
2) ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
3) கடுகு உளுந்தை தாளிக்கவும்
4) கடுகு வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.
5) வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நாம் முதலில் தயாரித்த கொரகொரப்பான பசையை சேர்த்து வதக்கவும்
6) பச்சை வாசனை போக வதக்கியதும், நறுக்கிய காராமணி காயை சேர்க்கவும்.
7) 5 நிமிடம் எண்ணெயில் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்
8) வதக்கிய படி மூடியை மூடி நடுத்தர தீயில் 5 நிமிடம் சமைக்கவும்
9) மறுபடியும் வதக்கி தீயை குறைத்து 5 நிமிடம் சமைக்கவும்
10) பின்னர், 1/2 கப் நீர் தெளித்து, வதக்கி விட்டு, மூடி போட்டு காய் வேகும் வரை சமைக்கவும்.
11) காய் வெந்து அனைத்து மசாலாக்களும் ஒன்றாக கலந்த பிறகு, பாக்கி இருக்கும் நீர் அனைத்தும் ஆவி ஆகும் வரை முழு தீயில் சமைக்கவும்.
12) இறுதியாக, துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை தூவி சூடாக பறிமாறவும் !
அருமையான சமையல் குறிப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி யாழினி :)
ReplyDeleteஅருமையான சமையல் குறிப்பு. நன்றி யாழினி :)
ReplyDelete